தமிழக நிதிநிலை அறிக்கை-மார்ச் 2இல் கருத்துக்கேட்புக் கூட்டம்



நிதி நிலை அறிக்கைகள் தொடர்பாக இறுதிக்கட்ட கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

தமிழக அரசின் 2023-2024 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளாக பொது நிதிநிலை அறிக்கையுடன் வேளாண் நிதிநிலை அறிக்கையையும் தனியாக தாக்கல் செய்து வருகிறது. அந்த வகையில் 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

நிதி நிலை அறிக்கை, வேளாண் நிதி நிலை அறிக்கைக்காக மார்ச் 20 ஆம் தேதி சட்டமன்றம் கூடுகின்றது. நிதி நிலை அறிக்கைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக் கேட்புக் கூட்டங்கள், பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளும் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில், தொழில் துறையினருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமைச்செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் மார்ச் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் சிறு குறு, நடுத்தர தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் மார்ச் 4 ஆம் தேதி கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறுகின்றது.


 

Comments